எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி வேட்பு மனு த்தாக்கல் செய்துள்ளது.
இன்றைய தினம் (10) காலை யாழ். மாவட்ட செயலகத்தில் குறித்த வேட்புமனுத்தாக்கள் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், யாழ் மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர் வேட்புமனுவை கையளித்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளராக க.இளங்குமரன் போட்டியிடுகிராதாவும் தெரிவிக்கப்படுகிறது.